அருட்பெருஞ்சோதி – விளக்கம்

அருட்பெருஞ்சோதி – விளக்கம்

1 ஜோதி

2. பெருஞ்சோதி

3. அருட்பெருஞ்சோதி

1. ஜோதி என்பது ஜீவ ஒளி

2. சாதனைகளால் – சோம சூரியாக்கினிகளின் கலப்பினாலும் , அபானனைக் கொண்டு ஊதுவதினாலும், இந்த ஜோதி – பெருஞ்சோதியாக ஓங்கி வளரும்

இது எப்படி என்றால் – கொல்லன் உலையை ஊதுவது போன்றது – ஊதுவதினால் அந்த நெருப்பு – கொழுந்து விட்டு எரிவது போன்று இந்த ஒளியும் பெருஞ்சோதியாக ஒளிவிடும்

கொல்லன் உலையை ஊதுவது : இதனைத் தான் வள்ளலார் ” மேடையிலே வீசிகின்ற மெல்லிய பூங்காற்றே ” என்று தன் அனுபவத்தைப் பாடுகின்றார்

இதனைத் தான் – ” உந்தீபற – உந்தீபற ” என்று சமய நூல்களும் , வள்ளலாரும் கூறுகின்றனர்

3. இந்த பெருஞ்சோதி , சாதனைகளின் வளர்ச்சியினால் , ஒரு கட்டத்தில், அருளைக் கொடுக்கும்பொழுது , அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது

அதாவது – முப்புரத்தை எரித்தப் பின்னும், திரைகள் எல்லாம் தீக்கிரையான பின்னும், அது அருளை வீசும்போது , அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது

இது ஒவ்வொரு ஜீவனின் பரிணாம வளர்ச்சிப் படிகள் ஆகும் – ஜீவன் சிவனாக ஓங்கும் வழியும் ஆகும்

வெங்கடேஷ்

Leave a comment