திருவருட்பா- சும்மா இருக்கும் சுகம்
இன்று வருமோ நாளைக்கே வருமோ
மற்றென்று வருமோ அறியேனே என் கோவே
துன்று மலவெம்மாயை அற்று வெளிக்குள்
வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்
கருத்து :
வள்ளல் சும்மா இருக்கும் சுகம் எப்போதுவரும் என்று ஏங்கும் பாடல் இது
அது இன்று / நாளை / எப்போது வருமோ எனக்குத் தெரியவில்லையே என் தலைவா ஆகிய ஆன்மாவே –
வெம்மை உள்ள மாயா மலம் கடந்து – உரை – மனம் ஆகிய வெளிகள் கடந்து செயலற்ற நிலையாகிய சும்மா இருக்கும் சுகத்துக்கு வருவேன் என்று தன் ஏக்கம் வெளிப்படுத்துகின்றார் வள்ளல் பெருமான்
முதல் வெளி – உரை வெளி
2 வது வெளி – மன வெளி
உரை மனம் கடந்த பெருவெளி மேல் தான் ஆன்மா மௌனமாக சும்மா இருக்கின்றது என்பது உண்மை
வெங்கடேஷ்
எவர் ஒருவர் தனது மனதை உரைய வைக்க பழகுகின்றார்களோ , அவர்களால் எல்லா வற்றையும் உணர்ந்து கொள்ள முடியும்.
LikeLike