வள்ளல் பெருமானின் நடத்திய அற்புதம் 12
சத்திய ஞான சபைக்கான கொடி மரம் அமைத்தல் பணி
அதுக்கு மரம் வேண்டி தன் அன்பரை சென்னைக்கு அனுப்பி எடுத்து வர சொன்னார் – இந்த உயரம் அகலம் இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்
அவரும் அவர் கூறிய மாதிரி தேர்ந்தெடுத்து பார்த்து – கடை முதலாளியிடம் விலை பேசினார்
அவரோ – இந்த விலைக்கு தான்
அன்பர்க்கும் அது மிக மிக அதிகமாக தோன்றியது
அதனால் வடலூர் வந்து வள்ளலிடம் சேதியை கூறினார்
அவர் நாளை செல்லவும் – நானும் அங்கிருப்பேன் என்றார்
அவர் அந்த இடத்துக்கு வந்து பார்த்த போது – வள்ளல் பெருமான் அந்த மரத்தின் மீது நின்றிருந்தார்
கடை அதிபர் – விலை குறைத்து அன்பர் கேட்ட விலைக்கே கொடுக்க சம்மதித்து கொடுத்து விட்டார்
அவர்க்கு வியப்போ வியப்பு
இது தான் ஞானியின் வல்லமை
மனதை மாற்றிவிடுவர்
அன்பர் தம்முடனே மரத்துடனே வண்டியில் செல்லலாம் என கூற , நீங்கள் எடுத்து வரவும் என கூறினாராம்
அன்பர் வடலூர் வந்து பார்த்த போது – அங்கே வள்ளல் பெருமான் வகுப்பு நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து – வியந்து – ஐயா எப்போது இங்கு வந்தார் ?? என வினவ
ஐயா எங்கும் செல்லவிலை – இங்கேயே காலையில் இருந்து இருக்கார் என கூற் , அவர்க்கு ஒன்றும் புரியவிலை
இது தான் சுத்த தேகம் போல் ஒளி தேகம் பெற்ற ஞானியர் வல்லமை – ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும் சஞ்சரிக்க முடியும் என்பது இந்த சம்பவம் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்
வெங்கடேஷ்