சிவவாக்கியர் பாடல்
நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினை
பற்றி ஒற்றி நின்று நின்று பற்று அறுத்தது என்பலன் ?
உற்று இருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனாய் அமர்ந்திட அறிந்தவன் அனாதியே
விளக்கம்:
தவத்தில் சாதனத்தில் , நெற்றியில் நீல ஒளி அனுபவம் வரும்
அது மனதை அமைதிப்படுத்திவிடும்
மனதின் அசைவை ஒழித்துவிடும்
அது வீர பத்திரர் உருவகம் ஆம்
அதை தவத்தில் பற்றி நின்று என் பலன் எனில் ??
அதன் பலனால் , மூலாக்கினி – மூலக்கனல் தோன்றி அதன் மேல் ஆன்ம ஒளி தோன்ற – அதனுடன் கலக்க அறிந்தவனுக்கு , தலைவன் இல்லை , அவன் தோற்றமிலா அனாதி ஆவான் , என்றும் சாஸ்வதமானவன்
வெங்கடேஷ்