அனுபவமும் உணர்தலும் – பாகம் 2
உணர்தல் என்பது வேறு – அனுபவம் என்பது வேறு
உணர்தல் ஒரு நிலை – அனுபவம் ஒரு நிலை
உணர்தலில் அனுபவம் இல்லை – ஆனால் அனுபவத்தில் உணர்தல் உண்டு
அனுபவம் உணர்தல் விட ஒரு படி மேல்
1 உணர்தல் – சிவவாக்கியர் பாடல்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லாரோ
என்னிலே இருந்து இருந்து என்னை நான் உணர்ந்து கொண்டேனே
என்னை = ஆன்மாவை
2 அனுபவம் – சிவவாக்கியர் பாடல்
அவனும் நானும் ஒன்று கலந்து அனுபவித்து அளவிலே
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லை ஆனதே
1 அவனும் நானும் ஒன்று கலந்து அனுபவித்து அளவிலே = தன் ஜீவன் ஆன்மாவுடன் கலந்த அனுபவம்
2 அவனும் உண்டு நானும் இல்லை = ஆன்மா இருந்தது – தான் கரைந்து போய்விட்டதாக தன் ஆன்ம அனுபவத்தை விளக்குகிறார் சிவவாக்கியர்
எனவே உணர்தலை விட அனுபவமே சிறந்தது – அது தான் வேண்டும்
வெங்கடேஷ்