பொற்சபையில் – சிற்சபையில் புகுவது எப்படி ??

பொற்சபையில் – சிற்சபையில் புகுவது எப்படி ??

எல்லான் தான் உடையதுவாய் எல்லாம் வல்லதுவாய்
எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும்
துணிந்து அளக்க முடியாதாய் துரியவெளிகடந்த
வல்லாளா அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
மதித்திடுங்கால் அரியதுவாய் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
திருச்சிற்றம்பலந்தனிலே தெய்வெமொன்றே கண்டீர்

இதில் திருச்சிற்றம்பலம் என்பது அணுவும் செல்ல முடியாததாய் விளங்குகின்ற இடம் என்று விளக்குகின்றார் வள்ளல்

அப்படியெனில் சிற்சபை என்பது ஆன்மாவைக் காட்டிலும் நுண்மையானது என்று அறிய வேண்டும்

அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்ககூடியது எதுவோ, அந்த ஒரு பொருளோடு நம் உணர்வு கலந்த அனுபவம் சித்தித்தால் தான் திருச்சிற்றம்பலத்திற்குள் நுழைய முடியும் என்பது திண்ணம்

நாமும் நம் உணர்வும் திருச்சிற்றம்பலத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் , நம் உணர்வு அணுவைக் காட்டிலும் நுண்மை அடைய வேண்டும் என்பது அவசியமாகின்றது

வெங்கடேஷ்

Leave a comment