திருமந்திரம் – மூல பந்தனம் – சன்மார்க்க விளக்கம்
மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்து
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே
பொருள் :
இதுக்கு நம் சிவ யோகியர் – ஞான தேசிகர்கள் உந்தி = தொப்புள் என தவறான பொருள் எடுக்கிறார்
உள் தீ பறக்கும் இடம் எதுவோ அதுவே உந்தி – தொப்புள் அல்ல
அதனால் சுவாசல் இடம் வலம் என இயங்காது ( வெளி ஓடியும் , உள் ஓடியும் , ரேசகம் & பூரகம் ) – நடுவாம் இடையாம் – குதம் ஆகிய புருவ மத்தியில் கும்பித்து நின்றால் , ஆன்ம சாதகன் சிவத்தின் அருள் பெறலாம்
புருவ மத்தி தான் மூலம் அது தான் உந்திக்கமலம்
ஆனால் உலகம் மூலம் என்றால் மல ஜலம் கழிக்கும் இடம் என தவறான பொருள் எடுக்குது
என்ன செய்ய ??
வெங்கடேஷ்
9600786642