“ திருமந்திரம் – ஆறாம் தந்திரம் “
துறவு – அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை
இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டு மமரர் பிரானே 1614
விளக்கம்:
எல்லாவற்றிலும் தோய்ந்து கலவாமல் நிற்கும் தன்மையாகிய துறவு நிலை அடைந்தார், இருமை ஆகிய பிறப்பு இறப்பு இல்லா ஜோதிப்பிழம்பான பரம்பொருளை , யார் மறப்புமிலாமல் நினைவு கொள்கிறாரோ , அவர் புகழை பேசுகிறாரோ அவர்க்கு ஆன்ம பதி இடத்துக்கு ஏற்றி வைப்பார் நந்தி என்னும் என் குரு
வெங்கடேஷ்