திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
கருத்து :
யார் தலை எண்ணற்ற குணங்களையுடைய திருவடிகளை வணங்குகிறதோ அவர்களுக்கு கோள் – காலம் , நேரம் , விதி , இந்திரியங்கள் , குணங்கள் என்பதில்லை
அப்படியெனில் யார் அவர் ??
ஆன்ம நிலையில் தான் காலம் நேரம் , பொறியாகிய இந்திரியங்கள் – குணங்கள் யாவும் கிடையா
யார் ஆன்ம நிலை எய்தி இருக்கிறார்களோ , அவர்கள் இறையின் திருவடி அடைய முடியும் – அதனுடன் கலக்க முடியும்
வெங்கடேஷ்