தமிழ்ப்பழ மொழி – வழக்கும் உண்மையும் 4
இடத்தைக் கொடுத்தா மடத்தை புடுங்குவான்
வழக்கு –
அதிக இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறிடுவான்
கொஞ்சம் இடம் கொடுத்தால் நம் சொத்தை அபகரித்துவிடுவான்
உண்மை :
தெய்வம் /ஆன்மாவுக்கு நம் நெஞ்சில் இடம் அளித்தால் அது நம் மடமையை புடுங்கிவிடும் நமக்கு நல்ல தெளிவு அறிவு நல்கும்
அதாவது ஆன்மா நம் உள்ளத்தில் ஒளி வீச ஆரம்பித்தால் – தேவையில்லாத காரியம் / எண்ணம் யாவையும் எடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திவிடும்
நாம் புனிதர் – புருஷோத்தமன் ஆவோம்
வெங்கடேஷ்