“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை”
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே
விளக்கம் :
சூரிய சந்திர கதிகள் நாசியில் இயங்கினால் அது அதோகதி ஆகி நம் ஆயுளைக் குறைக்கும்
இளமை அழிக்கும் உடல் வலுவிழக்கும்
அதைத் தான் அசுரர் என திருமூலர் உரைக்கிறார்
அதையே மாத்தி நடு நாடி சுவாசம் இயக்கம் சுழிமுனையில் நடந்தால் , அது நந்தி ஆகிய மெய்ப்பொருளுக்கு செயும் கிரியை ஆகும்
சுழிமுனை சுவாசம் நடக்க வேணுமென்பது கருத்து
வெங்கடேஷ்