சித்தர் பரிபாஷைகள்

சித்தர் பரிபாஷைகள்

சித்தர் ஏன் பரிபாஷைகள் பயன்படுத்தினர் எனில் , மிகப்பெரிய ரகசியங்கள் – பொக்கிஷங்கள் ( ரசவாதம் – பொன் செய்யும் வித்தை – காய கல்பம் செய்யும் வித்தை ) எல்லாம் தவறானவன் கையில் கிடைத்துவிடக் கூடாது என்பதுக்குத் தான்

நம் சமுதாயத்தில் இருக்கும் நிறைய பொறுக்கி பன்னாடைகளுக்கு பயந்து இம்மாதிரி மறைமொழிகளில் இரகசியமாக அதை குறிப்பிட்டுள்ளனர் என்பது உண்மை

உ ம்
1அமிர்தம் = இன்னொரு பெயர் அமுரி
அமுரி = சிறு நீர் என்ற அர்த்தமும் உள்ளது
இப்படி தெரிந்தே தான் வைத்தனர் – இப்படி மக்களை திசை திருப்பி விட்டனர்

அமிர்தம் = சிறுனீர் என்ற பொருள் கொண்டு அதை அருந்தியவர்களும் உண்டு – இன்னமும் அருந்திக்கொண்டிருக்கின்றவர்களும் உண்டு

2 8 * 2 – எட்டிரண்டு – Big Eight and TWo
இதுக்கு இன்னமும் சரியாக பொருள் எடுக்கத் தெரியாமல் சன்மார்க்க உலகமும் மற்றவரும் தவிக்கின்றனர்
அவரவர் தெரிந்தது சொல்கின்றனர் – ஆனால் எல்லாம் தவறு
இதுக்கு இறையின் அருள் வேணும் தெரிந்து கொள்ள
இது மிகப் பெரிய ரகசியம் ஆகும்
இது தெரிந்து இதை கூட்டினால் மூலக்கனல் – மூலாக்கினி உண்டாகும் – வாசி உருவாகும் – இன்னும் பல அனுபவங்கள் வரும்

3 நாத விந்து கலப்பு
இது சேர்ந்தால் உயர்னிலை தவ அனுபவங்கள் சித்திக்கும்- பிரமத்துவாரம் திறக்கும்

இதுக்கு பல பரிபாஷைப் பெயர்கள்
உ ம் – சிவம் சக்தி
தேனும் பாலும்

இப்படி ஒரு சித்தர் – இதுக்கு மலமும் ஜலமும் ( சிறு நீர் ) என்று வைத்துவிட்டார்

இதை நம்பி ஒருவன் இந்த இரண்டையும் கலந்து உண்டுவந்தான் – இது நிஜம்

அவன் போன ஜென்மத்தில் நாயாகவும் பன்றியாகவும் இருந்த பூர்வ ஜென்ம வாசனை போகவில்லை – அது தொடர்கின்றது

வெங்கடேஷ்

Leave a comment