திருமந்திரம் – ஆறாம் தந்திரம்
கழலார் கமலத் திருவடி யென்னு
நிழல்சேரப் பெற்றே னெடுமா லறியா
வழல்சேரு மங்கியு ளாதிப் பிரானுங்
குழல்சேரு மென்னுயிர் கூடுங் குலைத்தே 1600
விளக்கம்:
சிரத்தில் சிற்றம்பலத்தில் , சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கும் தாமரை மலர் போன்ற திருவடி நிழலோடு யானும் கலந்தனன்
நீண்ட நெடும் ஜோதியாக அண்ணாமலையாக நின்றவனை , திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதி அவன்
எமக்குள் இருக்கின்ற ஆன்மஒளி உள்ளே இருக்கின்ற ஆதி தலைவனாகிய இறைவனோடு எமது உடலோடு சேர்ந்து எமது உயிரும் சேர்ந்து அவனோடு கூடி ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து கலந்ததே
வெங்கடேஷ்