அகமும் புறமும் – கண்மணியும் காதலும்
1 புறம் :
ஒரு ஊதாரி – பொறுக்கி ஆக இருப்பவன் , காதலில் விழுந்து , திருமணம் செய்துகொண்டால் , அவன் மனைவிக்காக தன் நடை – உடை – பாவனை எல்லாம் நல்லதுக்காக மாற்றிக்கொள்கின்றான்
அவன் நல்லவனாக திருந்திவிடுகின்றான் – உழைத்து காசு சம்பாதிக்கின்றான் – பொறுப்புள்ளவனாக மாறிவிடுகின்றான்
உ ம் : சினிமா – புதிய பாதை – பார்த்தீபன் – சீதா
2 அகம் :
அதே போல் எவன் ஒருவன் வாழ்வில் – சாதனத்தில் திருவடிகளும் அது இருக்கும் கண்களும் சம்பந்தப்பட்டுவிட்டால் , அவனுக்குள் இருக்கும்
1 கல் மனம்
2 வல் மனம்
3 விலங்கு மனம்
4 மற்றெல்லா மனங்களும் தத்தம் குணம் மாறி , நல் மனம் ஆக மாறி – அது நெகிழும் நிலைக்கு வந்துவிடும் என்பது உண்மை
அவன் ஜீவன் உருகும் தன்மைக்கு மாறிவிடும்
இது தான் திருவடியின் வல்லமை – பெருமை ஆகும்
வெங்கடேஷ்