“ கைலாயம் – சன்மார்க்க விளக்கம் “ – கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம்
சிரமெனும் குகையின் உள்ளே சிவ கயிலாய மன்றில்
அரனிடம் அமையும் வாசி ஆடல்தான் செய்வார் என்று
பரமமெய் ஞான நூல்கள் பகர்வதை அறிந்து பார்த்து
வரமிகு நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே
விளக்கம் :
சிரத்தில் இருக்கும் கயிலாயம் எனும் பொது வெளியில் சிவம் ஆடல் செயும்
ஆகையால் கைலாயம் இமய மலையில் இலை – நம் மண்டையினுள்
அதை அறிந்து “ பார்ப்பாயாக “ என சித்தர் பாடுகிறார்
எப்படி பார்ப்பது ??
அது சாதனா ரகசியம்
கயிலாயமே சிரசினுள் அடக்கம் எனில் ??
எப்படி ?? துவாத சாந்தப்பெருவெளி சிரசுக்கு மேல் 12 “ அமையும் ??
இது நகைச்சுவை வேடிக்கை தானே ??
ஆகையால் உலகத்திடம் ஜாக்கிரதையாக இருக்கோணும்
மன்றத்தை நம்ப வேணாம்
வெங்கடேஷ்